மலேசியாவில் தீவிர தேர்தல் பிரசாரம்: தமிழர் ஓட்டுக்கள் யாருக்கு?
கோலாலம்பூர்: மலேசியாவில் மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தமிழர்களின் ஓட்டுக்களைக் குறி வைத்து தேர்தல் களத்தில் குதித்துள்ள 1500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் பாரிசன் தேசியக் கூட்டணியும், எதிர்க்கட்சிக் கூட்டணியும் காரசாரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழர்களின் வாக்குகளை யார் பெறப் போவது என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது என்பதால் தமிழர்களின் வாக்குகளை அள்ளும் முயற்சியில் இரு கூட்டணிகளும் போட்டி போட்டுக் கொண்டு களம் இறங்கியுள்ளன.
தற்போதைய பிரதமர் அப்துல்லா படாவி கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைத்தார். அப்போது அவரது கூட்டணிக்கு 199 எம்.பி சீட்களில் வெற்றி கிடைத்தது. 1990ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது.
இந்த நிலையில் 2வது முறையாக பிரதமர் பதவியைப் பிடிக்க களம் கண்டுள்ளார் படாவி.
மலேசிய நாடாளுமன்றத்தில் 220 சீட்கள் உள்ளன. இதில் 7 இடங்களில் ஆளும் பாரிசன் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். எனவே மீதம் உள்ள 215 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்க்கட்சிக் கூட்டணியினர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். 37 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.
இதேபோல மொத்தம் உள்ள 506 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு பாரிசன் தேசியக் கூட்டணி சார்பில் 502 பேர் களத்தில் உள்ளனர். எதிர்க்கட்சி தரப்பில் 539 பேர் களம் கண்டுள்ளனர். 66 பேர் சுயேச்சைகளாக களத்தில் உள்ளனர்.
பாரிசன் தேசியக் கூட்டணிக்குக் கடும் போட்டியாக எதிர்க்கட்சித் தரப்பில் ஜனநாயக நடவடிக்கைக் கட்சி, பார்டி இஸ்லாம் செ மலேசியா, பார்ட்டி கீதிலான் ரக்யத் ஆகிய கட்சிகள் உள்ளன.
ஆளும் கூட்டணிக்கு ஐக்கிய மலாய் தேசிய இயக்கம், மலேசிய சீன சங்கம், மலேசிய இந்திய காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவுடன்தான் மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் பாரிசன் தேசியக் கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை பாரிசன் தேசியக் கூட்டணிக்கு பெரும் சவால்கள் காத்துள்ளன. தமிழர்களின் போர்க்கொடியால் நிலவும் பதட்டம், தமிழரக்ளுக்கு எதிராக படாவி அரசு செயல்படுவதாக நிலவும் கருத்து, பொருளாதார சீரமைப்பில் காணப்படும் தொய்வு நிலை, அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு ஆகியவை முக்கிய தேர்தல் பிரச்சினைகளாக கருதப்படுகின்றன.
தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், மலாய் மற்றும் சீனர்களுக்கு நிகராக தங்களை அரசு நடத்தவில்லை. கல்வி, வேலைவாய்ப்பில் தாங்கள் சம அளவில் நடத்தப்படவில்லை என்ற அதிருப்தி தமிழர்களிடையே உள்ளது.
இதை முன்வைத்து கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மலேசியாவில் வாழும் தமிழர்கள் பல்வேறு வகையான போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்களை படாவி அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தி அடக்கியது, போராட்டத்தில் ஈடுபட்ட ஹிண்ட்ராப் நிர்வாகிகளை அடக்குமுறைச் சட்டமான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது ஆகியவை தமிழர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான தமிழர்களின் வாக்குகள் இம்முறை ஆளுங் கூட்டணிக்கு கிடைக்குமா என்பது பெரும் சந்தேகம்தான். எனவே தேர்தல் முடிவுகள் படாவி தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்காது என்றும் கருத்து நிலவுகிறது.
இப்படி பல்வேறு வகையான சிக்கல்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சிக் கொடிகளும், சின்னங்கள், வேட்பாளர்கள், தலைவர்கள் படம் இடம் பெற்ற பேனர்களும், கட் அவுட்களும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications