வருமான வரி விலக்கு ரூ. 1.5 லட்சமாக உயர்வு
2008-09ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார்.
அதில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி விகித்தத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும்.
ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்.
வருடத்துக்கு ரூ. 5 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு 30% வரி விதிக்கப்படும்.
முதியோருக்கான வருமான வரி விலக்கு ரூ. 2.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வருமான வரி வசூல் இலக்குகளை விஞ்சி சாதனை படைத்துள்ளதாக சிதம்பரம் கூறியுள்ளார்.
விவசாயிகளின் ரூ. 60,000 கோடி கடன் தள்ளுபடி
கார் விலை ரூ. 15,000 வரை குறைகிறது-பைக் விலையும் சரியும்