ஹின்ட்ராப் நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு
கோலாலம்பூர்: உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மலேசிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹின்ட்ராப் நிர்வாகிகள் ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடந்த மாபெரும் தமிழர்களின் பேரணியைத் தொடர்ந்து, அதற்கு ஏற்பாடு செய்த இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகள் உதயக்குமார், கங்காதரன், வழக்கறிஞர் மனோகரன், வசந்தகுமார் மற்றும் கணபதி ராவ் ஆகியோர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஐந்து பேரின் சார்பிலும் ஜாமீன் கோரி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தங்களைக் கைது செய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அவர்கள் தங்களது மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்னுல் அஸ்மல் அப் அஜீஸ், ஐந்து பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். மேலும் ஐந்து பேரும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சரியானதுதான் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications