ஓகேனக்கல்: கோர்ட்டுக்கு போகும் கர்நாடகம்
பெங்களூர்: தமிழகத்தின் கனவுத் திட்டமான ஓகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் ஓகேனக்கல் குடிநீர்த் திட்டம். அப்போதைய ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்திற்கென இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து சென்னைக்கும் குடிநீர் கொண்டு வர அப்போது யோசிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் கனவாகவே இருந்து வந்த இந்தத் திட்டம் தற்போதுதான் நனவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்தத் திட்டத்திற்கு தர்மபுரியில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் பேர் பலன் அடைவார்கள்.
இந்த நிலையில் இத்திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஓகேனக்கல் அருவிப் பகுதியில் தமிழக அரசு புதிய குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டம் சர்ச்சைக்குரிய பகுதியில் (ஓகேனக்கலையே தனக்குச் சொந்தமானது என்று கர்நாடகம் கூறி வருவது நினைவிருக்கலாம்) நிறைவேற்றப்படுவது குறித்து நாங்கள் எங்களது ஆட்சேபனையை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம்.
திட்டம் அமலுக்கு வரும் ஓகேனக்கல் பகுதி கர்நாடகத்திற்குச் சொந்தமானது. மேலும் காவிரி ஆற்று நீர் பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு புறம்பானதாகும்.
மத்திய அரசிடமிருந்து வரும் பதிலைப் பொறுத்து உச்சநீதிமன்றத்தை அணுக நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளோம். தமிழக அரசுக்கும் இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கோரி கடிதம் எழுதியுள்ளோம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து வழக்கு நிலுவையில் உள்ளதையும் தமிழக அரசுக்கு சுட்டிக் காட்டியுள்ளோம் என்றார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications