எம்ஜிஆரின் வாரிசு ஜெயலலிதாதான்- டி.ஆர். அதிரடி

திமுகவின் அனல் பறக்கும் பிரசார பீரங்கியாக ஒரு காலத்தில் விளங்கியவர் ராஜேந்தர். நீண்ட காலமாக திமுகவில் இருந்த ராஜேந்தர் எம்.ஜி.ஆரை எதிர்த்து அரசியல் செய்தவர்.
நீண்ட கால திமுக வாசத்திற்குப் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து விலகி கட்சி ஆரம்பித்தார். இதில் தேற முடியாமல் போன அவர் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அவர் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தார்.
பின்னர் திடீரென திமுக கூட்டணிக்கு மாறினார். தேர்தலுக்குப் பின்னர் அவரை திமுக கண்டு கொள்ளவில்லை. இதனால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் ராஜேந்தர். இதையடுத்து உடனடியாக அவருக்கு மாநில சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
இந் நிலையில் எம்.ஜி.ஆரின் வாரிசு யார் என்ற சமீப கால சர்ச்சையில் ராஜேந்தரும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனித்தே தேர்தலை சந்திப்பேன் என விஜயகாந்த் கூறி வருகிறார். கடைசி வரை அந்த கொள்கையை அவர் பின்பற்றுவாரா என்று பார்க்கலாம்.
காமராஜர் ஆட்சி அமைப்பேன் என சரத்குமார் கூறிவருவது அவருடைய தனிப்பட்ட கருத்து. இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை வெளியிடலாம்.
பல கட்சிகள் 2011ல் தாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என கூறி வருகிறார்கள். மழை வரும் என்று வானிலை அறிக்கையில் சொல்வார்கள். அன்று மழை வராது. திடீரென ஒருநாள் வந்து சேரும். அதுபோல சொல்கிறவர்கள் ஆட்சியை பிடிக்காமல் எங்களை போன்ற கட்சிகளும் மாற்றத்தை கொண்டு வரலாம்.
இன்னும் நான் திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவு சீட் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு, இப்போதைக்கு பதில் இல்லை. பிள்ளையே பிறக்காதபோது அதற்கென்ன பேர் வைப்பீர்கள் என்று கேட்பது அர்த்தமற்றது.
லட்சிய திமுக என்ற புள்ளியில்லாமல் யாரும் இங்கு அரசியல் கோலம் போட முடியாது.
எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என பல பேர் பேசி வருகிறார்கள். பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவன் என்ற அடிப்படையில் என்னுடைய கருத்து என்னவென்றால், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என்று சொல்வதற்கு ஜெயலலிதாவிற்கு தான் தகுதி உள்ளது.
லதிமுகவின் லட்சிய கீதம்:
லட்சிய திமுக கட்சியின் பிரச்சார பாடல்கள் "லட்சிய கீதம்' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாடல்கள் எழுதி நானே இசையமைத்துள்ளேன். வரும் 4ந் தேதி தி.நகர் தியாகராயர் அரங்கில் நடைபெறும் விழாவில் இந்த பிரச்சார பாடல்களை மதுரை ஆதீனம் வெளியிட உள்ளார்.
தொடர்ந்து 8ந் தேதி அரக்கோணத்திலும், 9ந் தேதி திருவண்ணாமலையிலும், 15ந் தேதி தூத்துக்குடியிலும் கட்சியின் கொடியேற்று விழாவும், பிரச்சார கூட்டமும் நடைபெறும்.
விரைவில் லட்சிய திமுகவின் முதலாவது மாநில மாநாடு நடைபெறும். ஆனால் அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.
அடுத்த ஆண்டுக்குள் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதற்குள் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையாக பிரச்சார கூட்டங்களும், கொடியேற்று விழாவும் மாநிலங்கள் முழுவதும் நடைபெறும் என்றார் அவர்.
அப்ப மீண்டும் அதிமுக நோக்கி 'காவடியா?'...
-
Jayalalithaa: ஜெயலலிதா வீடு பறிமுதல்.. ரூ.1.60 கோடி சொத்து வரி பாக்கியால் ஐதராபாத் மாநகராட்சி நடவடிக்கை -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications