தன்னிச்சையாக சிகரெட் விலையை உயர்த்திய கடைக்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பட்ஜெட்டில் வரி உயர்த்தப்படாத நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் பில்டர் சிகரெட் விலையை தாங்களாகவே உயர்த்தியுள்ளனர் கடைக்காரர்கள்.
பட்ஜெட்டில் பில்டர் அல்லாத சிகரெட்களின் மீதான வரி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது கூட ஏப்ரல் 1ம் தேதி முதல் தான் அமலுக்கு வருகிறது.
இந் நிலையில் இப்போதே எல்லா சிகரெட்களின் விலையையும் பல இடங்களில் அதிகரித்து விற்க ஆரம்பித்து விட்டனர். தற்போது விற்கப்பட்டு வரும் விலையை விட கூடுதலாக 50 பைசா வரை கூட்டி விற்க ஆரம்பித்துள்ளனர் கடைக்காரர்கள்.
அதே போல மொத்த சிகரெட் விற்பனையாளர்கள் சிகரெட்டை பதுக்கி வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஸ்டாக் இல்லை என்று கூறி செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த டிமாண்ட்-தட்டுப்பாட்டை காரணமாக வைத்து விலையை உயர்த்தியுள்ளனர் கடைக்காரகள்.












Click it and Unblock the Notifications