ரூ. 100க்கு பான் கார்டு பெறும் புதுத் திட்டம் அறிமுகம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, தபால் அலுவலகத்தில் ரூ. 100க்கு பான் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தபால் நிலைய உதவி போஸ்ட் மாஸ்டர் பாண்டியன் கூறுகையில், வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு (நிரந்தர கணக்கு எண்) பெற தபால் அலுவலகம் மூலம் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது வரை மக்கள் சில தனியாரிடம் அதிக பணம் கொடுத்து பான் கார்டு வேண்டி காத்திருந்தனர். ஆனால் இனி கால தாமதத்தைத் தவிர்க்கவும், பணம் விரையம் ஆவதை தடுக்கவும் தபால் அலுவகம் உதவி செய்கிறது.
வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு விண்ணப்பங்கள் இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் இரண்டு ஸ்டாப் சைஸ் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற அரசு அறிவித்த 8 வகையான ஆவணங்களின் நகல்களைக் கொடுத்து பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.
இவற்றுக்கு ஆகும் மொத்த செலவு ரூ. 100 மட்டுமே என்றார்.












Click it and Unblock the Notifications