பஸ்-டிராக்டர் மோதல்: 2 பேர் பலி; 55 மாணவர்கள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நேற்று நடந்த பயங்கர சாலை விபத்தில் 2 பேர் பலியானார்கள். 55 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திண்டிவனம் அருகே 55 மாணவர்களுடன் ஒரு சுற்றுலா பேருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்து திடீரென தாறுமாறாக ஓடியதில், எதிர் திசையில் வந்த டிராக்டர் மீது மோதியது.
இதில் டிராக்டரில் இருந்த முனியன் (22), சதீஷ் (22) ஆகிய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த கோர விபத்து குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து ஓட்டுநர் ஷேக் அன்வர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications