குரங்கு போல கேலி செய்ததாக ஹர்பஜன் மீது புகார்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: சிட்னியில் நேற்று நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதாலவது இறுதிப் போட்டியின்போது ரசிகர்களைப் பார்த்து சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குரங்கு போல சைகை காட்டி கேலி செய்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளனர். தனது இரு கைகளையும் அக்குளில் வைத்துக் கொண்டு குரங்கு போல அவர் செய்ததாக அந்த செய்திகள் கூறுகின்றன.
ஹர்பஜன் அதுபோல செய்வதாக கூறி ஒரு புகைப்படத்தை சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இதை இந்திய அணியின் மேலாளர் பிமல் சோனி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உண்மையில், ஆஸ்திரேலிய ரசிகர்கள்தான் ஹர்பஜனை கிண்டலடித்தார்கள். அவர் ஒன்றும் கேலி செய்யவில்லை என்று கூறியுள்ளார் சோனி.












Click it and Unblock the Notifications