பெங்களூரில் 'சேஞ்ச் இந்தியா' அமைப்பு தொடக்கம்
பெங்களூர்: அரசு நிர்வாகத்தில் திறமை, ஒளிவுமறைவற்ற போக்கு, நம்பகத்தன்மையை கொண்டு வரும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள 'சேஞ்ச் இந்தியா' இயக்கம் பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூர் ராயல் டெலிவரி சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஆர்.கே.மிஸ்ரா, சேஞ்ச் இந்தியா அமைப்பைத் தொடங்கி வைத்தார்.
மக்கள் சேர்ந்து நடத்தும் இயக்கம்தான் சேஞ்ச் இந்தியா. அரசு நிர்வாகத்தில் நிலவும் மெத்தனம், அசமஞ்சம் உள்ளிட்டவற்றை மக்கள் இணைந்து போக்கும் நோக்குடன் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் மக்கள் தொடர்பான பணிகளை மக்களே சேர்ந்து எடுத்து நடத்தி அதன் மூலம் அரசையும் செயல்பட வைப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்.
இந்த இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் மக்களுக்காக உழைக்க அரசு இயந்திரத்தை திருப்பும் நோக்கமும் இந்த இயக்கத்திடம் உள்ளது.
சேஞ்ச் இந்தியா தொடக்க விழாவில் பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனங்களின் நிர்வாகிகள், வங்கித் துறை, நிதித்துறை, உற்பத்தித் துறை, சேவைத் துறை உள்ளிட்ட பல்துறைகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய லீட் இந்தியா போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய 8 பேரில் ஒருவரான தேவங் நானாவதியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நானாவதி பேசுகையில், சேஞ்ச் இந்தியா போன்ற இயக்கத்தால் இந்தியாவில் உள்ள இளைய சமுதாயத்தை ஆக்கப்பூர்வமான பாதையில் திருப்ப முடியும் என்றார்.
சிம்பொனி சர்வீஸஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அஜய் கேலா, கூகுள் பிரசாத் ராம் ஆகியோரும் பேசினர்.
விரைவில் சேஞ்ச் இந்தியாவின் கிளைகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் அந்தந்த நகரங்களின் பிரச்சினைகளை கையில் எடுக்க சேஞ்ச் இந்தியா திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் 4 கோடி இளைஞர்களை இந்த இயக்கத்தில் சேர்க்க சேஞ்ச் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
சேஞ்ச் இந்தியா குறித்த மேலும் விவரங்கள் அறிய:
[email protected] என்ற இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
முகவரி:
சேஞ்ச் இந்தியா இயக்கம்,
விமான நிலையம்- வர்த்தூர் சாலை,
பெங்களூர் - 560066
பேக்ஸ் 080--2852-5356
இணையதளம்:












Click it and Unblock the Notifications