40 கிலோ பிளாஸ்டிக் பேப்பர்களை தின்ற பசு மாட்டுக்கு ஆபரேஷன்
நெல்லை: நெல்லையில் 40 கிலோ பிளாஸ்டிக் பேப்பர்களை சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டிற்கு அரசு கால்நடை மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து காப்பாற்றினர்.
பாளையங்கோட்டை சட்டம்-ஒழுங்கு கமிஷனர் அலுவலகம் அருகே நேற்று ரோட்டில் ஒரு பசு மாடு எழுந்திருக்க முடியாமல் உயிருக்க போராடிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்க டாக்டர் எல்லப்பன், ஊழியர்கள் ஆகியோர் ஒரு வேனில் பசுமாட்டை ஏற்றி நெல்லை ஜங்ஷன் அரசு கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மாட்டிற்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது மாட்டின் வயிற்றில் பாலீதின் கவர்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் மாட்டின் குடல்களில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடித்து கால்நடை டாக்டர்கள் பாரதி, சந்திரபோஸ், கிருஷ்ணசாமி ஆகியோர் உடனடியாக மாட்டிற்கு ஆபரேஷன் செய்து வயிற்றில் இருந்த 40 கிலோ பாலிதீன் கவர்களை வெளியில் எடுத்தனர். பின்னர் மாட்டிற்கு சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினர்.
பொதுமக்களில் பலர் பிளாஸ்டிக் பேப்பர்கள், கவர்களை தெருவில் எறிந்து விடுவதால் அதனை சாப்பிடும் கால்நடைகள் குடல்களில் அடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து விடுகின்றன. பாலிதின் கவர்களை உபயோகிப்பதை குறைந்து கால்நடைகள் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications