சென்னை-அதிகாரி வீட்டில் ரூ10 லட்சம் நகை கொள்ளை
சென்னை: சென்னையை அடுத்துள்ள திருமுல்லைவாயிலில் மின்வாரிய அதிகாரி வீட்டில் பட்டப்பகலில் புகுந்த திருடர்கள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகரில் வசிப்பவர் முனுசாமி (50). இவர் மீஞ்சூரில் மின்வாரிய அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகைகள், பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார்.
உடனே திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
முனுசாமி வீட்டின் பீரோவில் வைத்திருந்த 80 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி சாமான்கள் மற்றும் ரூ.28,000 ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
கொள்ளைபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications