எம்பி பதவி: திமுக-பாமக மோதல் உச்சகட்டம்!

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த என்.ஜோதி, சி.பெருமாள், சையது கான், தங்க தமிழ்ச்செல்வன், திமுகவைச் சேர்ந்த சண்முக சுந்தரம், காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே.வாசன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது.
இதையடுத்து இந்த 6 இடங்களுக்கும் வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 8ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. தமிழக சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் வாக்களித்து இந்த எம்பி்க்களைத் தேர்வு செய்வர்.
ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை. தற்போதைய கணக்குப்படி திமுக கூட்டணிக்கு 165 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் இந்தக் கூட்டணிக்கு 4 எம்பிக்கள் கிடைப்பர். அதில் ஒன்றை காங்கிரசுக்கு கொடுத்துவிட்டு 3 பதவிகளை தானே எடுத்துக் கொள்ள திமுக நினைக்கிறது.
அதிமுகவுக்கு ஒரு எம்பி பதவி மட்டுமே உறுதியாகக் கிடைக்கும். மதிமுக வாக்குகளையும் சேர்த்தாலும் அக் கட்சியின் 2வது வேட்பாளர் வெல்ல வேண்டுமானால் மேலும் 2 எம்எல்ஏக்களின் வாக்குகள் வேண்டும்.
காங்கிரசுக்கு 35 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் அக்கட்சிக்கு ஒரு இடத்தை திமுகவிடம் நிச்சயமாக பெற்று வென்றுவிடும்.
இந் நிலையில் 18 எம்எல்ஏக்களை வைத்துள்ள தங்கள் கட்சிக்கும் ஒரு எம்பி பதவியை பெற்றே தீருவது என்பதில் பாமக தீவிரமாக உள்ளது. சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை ராமதாஸ் சந்தித்தது கூட இந்த எம்பி பதவிக்காகத் தான்.
ஆனால், பாமகவுக்கு ஒரு பதவியை விட்டுத் தர திமுக தயாராக இல்லை.
இந் நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி கடந்த இரு தினங்களாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து எம்பி பதவி தொடர்பாக பேசினார். ஆனால், திமுக விட்டுத்தராததால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாமக கடும் கோபத்தில் உள்ளது.
இது தவிர 9 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ஒரு எம்பி பதவியைக் கேட்கிறது.
அதே போல நேற்று முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்திய சோனியா காந்தி, காங்கிரசுக்கு மேலும் ஒரு இடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
திமுக கூட்டணி கூட்டம் தள்ளிவைப்பு:
இந்தக் குழப்பங்களால் வரும் 7ம் தேதி நடக்கவிருந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை திமுக திடீரென ரத்து செய்துவிட்டது.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 7ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்த தோழமைக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலுக்கு 8ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
-
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications