நாளை மகா சிவராத்திரி
சென்னை: மகா சிவராத்திரி நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
மாதாமாதம் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் இந்த சிவராத்திரி மகா சிவராத்திரியாகக் கொண்டாடடப்படுகிறது.
பார்வதி தேவி ஒருமுறை விளையாட்டாக சிவபெருமானின் இரு கண்களையும் கைகளால் மூட, உலகம் முழுவதும் இருண்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பார்வதி தேவி உணவின்றி முழு விரதம் இருந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்ததாகவும், அதையே சிவராத்தியாக கொண்டாடுவதாகவும் ஐதீகம்.
மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்து வழிபட்டால் பெருவாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு மகாசிவராத்திரி நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
நாளை முழு நாள் விரதம் இருந்து வீடுகளிலோ அல்லது கோவில்களுக்கு சென்றோ சிவனை வழிபடலாம்.
நாளை இரவு முழுவதும் கண் உறங்காமல் விழித்திருந்து சிவனை வழிபட்டால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.
இந்த தினத்தையொட்டி சிதம்பரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவானைக்காவல், தஞ்சை மற்றும் காளஹஸ்தி உள்ளிட்ட சிவ ஸ்தலஙக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட உள்ளனர்.
இந்தக் கோவிலிகளில் 6 கால பூஜைகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து இந்தக் கோவில்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.