தலித்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட அனுமதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர் அருகே உள்ளது பாவாலி. இங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்குள் தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சென்று வழிபாடு செய்ய குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இதையடுத்து அந்தக் கோவில் மூடப்பட்டது.
கோவிலுக்குள் தலித் மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
எம்எல்ஏ நன்மாறன் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பங்கு கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.