ராஜ்யசபா தேர்தல்: ராமதாஸ் ஒத்துழைக்க தா.பாண்டியன் கோரிக்கை

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே பாமகவுக்கு திமுக ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கி விட்டது. அதில் அவரது மகன் அன்புமணி நின்று அமைச்சராகவும் ஆகி விட்டார். எனவே மீண்டும் சீட் கேட்காமல், கூட்டணி முடிவை ஏற்று, ராஜ்யசபா தேர்தலில் ஒத்துழைக்க வேண்டும்.
ராஜ்யசபா சீட்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இடதுசாரிக் கட்சிகளுக்கும், திமுகவுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை என்று ராமதாஸ் கூறுவது தவறானது.
அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கும், எங்களுக்கும் தலா ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக ஒப்பந்தம் செய்தது. அதன்படி கடந்த ஆண்டு சிபிஐக்கு ஒரு சீட் தரப்பட்டது. இந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தரப்பட்டுள்ளது.
எனவே இதை ராமதாஸ் புரிந்து கொண்டு, திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாமகவின் மது விலக்கு கோரிக்கை தமிழகத்தில் சாத்தியம் இல்லாதது. காரணம், பக்கத்து மாநிலங்களில் எல்லாம் மதுவுக்கு எந்தத் தடையும் இல்லாதபோது தமிழகத்தில் மட்டும் மது விலக்கை அமல்படுத்துவது என்பது சாத்தியமற்றது என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications