கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை: குழந்தையும் பலி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: வறுமை காரணமாக கணவன், மனைவி உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் அவர்களது 10 மாதக் குழந்தையும் தீயில் கருகி இறந்தது.

விருதுநகரில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தவர் சரவண குமார் (28). இவரது மனைவி இந்துமதி (21). இவர்களது 10 மாத குழந்தை அபிநயஸ்ரீ.

சரவணகுமாருக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வறுமையால் தினந்தோறும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

இந் நிலையில் நேற்று கணவன், மனைவி இருவரும் தனித் தனியே தங்களது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டனர்.

அலறி துடித்த இவர்களை நோக்கி அழுதபடியே வந்த குழந்தையும் தீயில் கருகியது.

உடல் கருகி உயிருக்கு போராடிய மூவரையும் அக்கம்பக்கத்து வீட்டினர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மூவரும் இறந்தனர்.

இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+