இஸ்ரேல் மதப் பள்ளி மீது தாக்குதல்-8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் யூத மதப் பள்ளியில் புகுந்த பாலஸ்தீன தீவிரவாதி, நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் பலியாயினர்.

ஜெருசலேம் நகரின் மெர்கஸ் அராவ் யேஷிவா பகுதி யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள யூத மதப் பள்ளிக்குள் நுழைந்த பாலஸ்தீன தீவிரவாதி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.

இதில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். அப்போது போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் அந்தத் தீவிரவாதி கொல்லப்பட்டான்.

பாலஸ்தீனத்தின் மீது கடந்த 8 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 130 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று இஸ்ரேலிய பள்ளியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இச்சம்பவத்தால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+