விறுவிறு வாக்குப்பதிவுடன் முடிந்தது மலேசிய தேர்தல்

மலேசிய நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.
பிரதமர் அப்துல்லா அகமது படாவி அப்துல்லா இன்று காலை பினாங்கில் உள்ள செகோலா கெபாங்சன் பெர்மடாங் பெர்டாம் என்ற இடத்தில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி ஜீன் அப்துல்லாவும் வாக்களித்தார்.
பின்னர் படாவி செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குப்பதிவு நாடு முழுவதும் அமைதியாக நடக்கிறது. எந்தவித வன்முறையும் இல்லை. மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.
துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக், தனது மனைவி ரோஸ்மா மன்சூருடன் பஹாங் மாகாணத்தில் வாக்களித்தார்.
மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், சுங்காய் சிபுட் எம்.பி தொகுதியில் போட்டியிடுபவருமான டத்தோ சாமிவேலு தனது மனைவியுடன் வாக்களித்தார்.
கெலன்டன், பெராக், செலாங்கூர், பெர்லிஸ், டெராங்கனு உள்பட அனைத்து மாகாணங்களிலும் தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த வாக்குப் பதிவு 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. மாலை 3 மணி வரை 58 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
டெராங்கனுவில் வன்முறை:
வடக்கு டெராங்கனு மாகாணத்தில் ஒரு கும்பல் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது. 3 போலீஸ் கார்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அந்தக் கும்பலைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிக் கலைத்தனர்.
அவர்கள் அனைவரும் மலேசிய முஸ்லீம் கட்சியைச் ேசர்ந்தவர்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போலி வாக்காளர்கள் என சந்தேகப்பட்ட சிலரை அவர்கள் பிடித்து சோதனையிட்டதால் வன்முறை மூண்டது.
இதேபோல பினாங்கில், எதிர்க்கட்சியைச் ேசர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கூடி அரசை எதிர்த்துக் கோஷமிட்டு கலாட்டாவில் இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இறுப்பினும் போலீஸார் உடனடியாக தலையிட்டு வன்முறையைத் தடுத்து விட்டனர்.
இன்றே வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இரவு 7 மணியளவில் முதல் சுற்று முன்னணி நிலவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கூட்டணிக்கு தமிழர்கள் மற்றும் சீனர்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்காது என்ற கருத்து நிலவுவதால் தேர்தல் முடிவுகளை மலேசிய மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications