திமுக எம்எல்ஏ மீது வழக்கு: இன்ஸ்பெக்டர் இடமாற்றம்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: குளித்தலை திமுக எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், குளித்தலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது.

மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியபோது மேடையை நோக்கி அரிவாள், தடி, கம்புகளோடு பாய்ந்த திமுகவினர் நாஞ்சில் சம்பத்தை தாக்கினர்.

தடுக்க முயன்ற கட்சி நிர்வாகிகள் 11 பேரும் காயமடைந்தனர்.

குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் 300 திமுகவினர் இந்தத் தாக்குதல் நடத்தியதாக மதிமுக புகார் தந்தது.

இதையடுத்து மதிமுகவினரை தாக்கியதாக திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம், அவரது தம்பி மகேந்திரன், அரசு வக்கில் சாகுல் அமீது உள்பட 9 பேர் மீது குளித்தலை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்தார்.

இந் நிலையில் குளித்தலை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி திடீரென்று அரவாக்குறிச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஈரோடு இன்ஸ்பெக்டர் முருகன் நியமிக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+