கிருஸ்துவர்களிடையே ஜாதிக் கலவரம் நடந்த கிராமம்-வெறிச்சோடியது
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் இடையே ஜாதிக் கலவரம் நடந்த எறையூரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டதால் அந்த கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
இங்குள்ள புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் வழிபாடு நடத்தும் போது தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தலித் மக்கள் குற்றம் சாட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 3 மாதமாக பிரச்சனை இருந்து வந்தது.
இந் நிலையில் தலித் சமூக மக்கள் தனியாக ஒரு தேவாலயத்தை நிறுவி, தங்கள் தேவாலயத்தை தனிப் பங்காக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்ததால் பிரச்சனை தீவிரமானது.
இதற்கிடையே நேற்று காலை அங்கு பயங்கர ஜாதிக் கலவரம் வெடித்தது. தலித் காலனி பகுதிக்குள் புகுந்த வன்னியர் சமூகத்தினர் வீடுகள் அடித்து நொறுக்கியதோடு தேவாலயத்தையும் தாக்கினர்.
இதையடுத்து கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெரியநாயகம் ( 42), மகிமை ராஜ் (25) ஆகியோர் பலியாயி்னர்.
இந்த சம்பவத்தையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். மிச்சமுள்ள குடும்பங்களிலும் போலீசார் கைது செய்யலாம் என்ற அச்சத்தில் ஆண்கள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர்.
இதனால் ஊரே வெறிச்சோடிப் போயுள்ளது.
தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் தலைமையிலான படை அங்கு முகாமிட்டுள்ளது. புனித ஜெபமாலை அன்னை ஆலயத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தாசில்தார் கொடுத்துள்ள புகாரில் 2,000 பேர் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை 19 பேரை கைது செய்துள்ளனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் ஆரோக்கியதாஸ் கொடுத்த புகாரில், தலித் சமூகத்தினர் உண்ணாவிரதம் இருந்தபோது மேத்யூ, அந்தோணி சாமி உள்ளிட்டோர் மைக் மூலம் ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.கூறியுள்ளார்.
இதையடுத்து மேத்யூ, அந்தோணி சாமி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கலவரம் நடந்த பகுதிக்கு அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். அன்னை ஆலயத்தின் பாதிரியார் எலியாசிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications