பள்ளிகளில் புகார் பெட்டிகளை வைக்க அரசு உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள், மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரம் போன்றவை அதிகரித்து வருகின்றன.
இவை பெரும்பாலும் வெளியில் வருவதில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி பெற்றோர்களும் வெளியில் சொல்வதில்லை. பள்ளிகளும் மூடி மறைத்து விடுகின்றன. இதனால் குழந்தைகள் மன உளைச்சல் அடைகின்றன.
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் சமீபத்தில் சென்னையில் பொது விசாரணை நடத்தியது. அதில் இது தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எல்லாவித வன்முறைகளில் இருந்தும் குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்தது.
அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி எல்லா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் பாதிக்கப்படும் குழந்தைகள் புகார் தெரிவிக்க வசதியாக புகார் பெட்டி வைக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும், உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கவும் தங்களுக்கு உரிமை உண்டு என்ற விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் தங்களுக்கு அளிக்குப்பட்ட தண்டனைகளுக்கு எதிராக பேச குழந்தைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
அனைத்து பள்ளிகள், விடுதிகள், குழந்தை பராமரிப்பு அமைப்புகள், இல்லங்கள் ஆகியவற்றில் சிறப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் தங்கள் பிரச்னைகளை தயங்காமல் வெளிப்படுத்தும் சூழலை ஏற்படுத்த வேண்டும். இதற்காக தன்னார்வ அமைப்புகளின் உதவியை நாடலாம்.
அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். இவற்றில் யார் மீது புகார் சொல்ல குழந்தைகள் விரும்புகிறார்களோ அவர்கள் குறித்து புகார்களை போடலாம். அனுப்புனர் முகவரி இல்லையென்றாலும் புகார்கள் ஏற்கப்பட வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தண்டனை, வன்முறைகளைக் கண்காணித்து கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு அரசு அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications