இன்றிரவு முதல் விமான நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக்
டெல்லி: பெங்களூர், ஹைதராபாத்தில் பழைய விமான நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு செய்திருப்பதை எதிர்த்து நாடு முழுவதும் இன்றிரவு முதல் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதனால் நாடு முழுவதுமே விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படவுள்ளன.
ஹைதராபாத், பெங்களூரில் புதிய சர்வதேச விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து பழைய விமான நிலையங்கள் இரண்டு்ம் மூடப்படவுள்ளன.
இதற்கு விமான நிலைய ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரைப் பொறுத்தவரை நகருக்கு 30 கி.மீ. தூரத்தில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. பெங்களூர் போக்குவரத்து நெரிசலையும் கணக்கில் கொண்டால் இந்த விமான நிலையத்தை அடையவே 3 மணி நேரம் ஆகும்.
இதனால் இந்த விமான நிலையத்துக்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இதன் காரணமாக பெங்களூரில் இருந்து செல்லும் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் புக்கிங் செய்வது கடந்த 2 வாரங்களில் 35 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விமான நிலையம் ஏப்ரல் 2வது வாரத்திலிருந்து செயல்படவுள்ளது.












Click it and Unblock the Notifications