ரஜினியை முதல்வராக்க நினைத்த நரசிம்ம ராவ்

சென்னையைச் சேர்ந்த டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த், தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் ரஜினி குறித்த பல்வேறு தகவல்கள் குவிந்துள்ளன.
இதில் ரஜினியைத் தேடி முதல்வர் பதவி வந்ததாக ஒரு தகவல் இடம் பெற்றுள்ளது.
அது 1995. அப்போது ஜெயலலிதாவுடன் கடும் மோதல் போக்கில் இருந்தார் ரஜினிகாந்த். ஜெயலலிதா ஆட்சியில் வெடிகுண்டுக் கலாச்சாரம் பெருகி விட்டதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில்தான் ரஜினிக்கு அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடமிருந்து போன் வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதற்காக ரஜினிக்கு, ராவ் நன்றி கூறினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் உங்களை முதல்வர் பதவியில் அமர்த்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ராவ்.
இதைக் கேட்ட ரஜினிகாந்த், யோசித்துச் சொல்வதாக தெரிவித்தார். பின்னர் தான் சென்னைக்கு வரவுள்ளதாகவும், அப்போது நேரில் சந்தித்து முடிவெடுக்கலாம் எனவும் ராவ் கூறியுள்ளார்.
அதன்படி நரசிம்மராவ் சென்னைக்கு வந்தபோது, சத்தியமூர்த்தி பவனில் வைத்து ராவ் - ரஜினி சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது, தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என கூறி விட்டார் ரஜினி. மேலும், முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் மூப்பனார்தான். எனவே அவரையே முதல்வராக்குங்கள் என்றும் கூறியுள்ளார் ரஜினி.
அத்தோடு நில்லாமல், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என நான் நினைக்கிறேன் (அப்போது அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது). திமுகவுக்கு நாம் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் ராவிடம் கூறினார் ரஜினி.
ஆனால் இதை ராவ் விரும்பவில்லை. ரஜினி நேரடியாகப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும். சொந்தக் காலில் ஆட்சி அமைக்க முடியும். அதேசமயம், திமுகவுக்கு வாய்ப்பளிக்க அவர் விரும்பவில்லை. மேலும் மூப்பனாரை முதல்வராக்கவும் அவர் விரும்பவில்லை.
இது ரஜினிக்கும் புரிய வந்தது. திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
அவர் எதிர்பார்த்தபடியே அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என நரசிம்ம ராவ் அறிவித்தார். காங்கிரஸ் உடைந்தது. மூப்பனார் தலைையில் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. திமுகவுடன் கூட்டணி வைத்தது. ரஜினி ஆதரவு அளித்தார். திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதிமுக-காங்கிரஸ் கூட்டணி படு தோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதாவும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்று காயத்ரியின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications