ரஜினியை முதல்வராக்க நினைத்த நரசிம்ம ராவ்

சென்னையைச் சேர்ந்த டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த், தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் ரஜினி குறித்த பல்வேறு தகவல்கள் குவிந்துள்ளன.
இதில் ரஜினியைத் தேடி முதல்வர் பதவி வந்ததாக ஒரு தகவல் இடம் பெற்றுள்ளது.
அது 1995. அப்போது ஜெயலலிதாவுடன் கடும் மோதல் போக்கில் இருந்தார் ரஜினிகாந்த். ஜெயலலிதா ஆட்சியில் வெடிகுண்டுக் கலாச்சாரம் பெருகி விட்டதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில்தான் ரஜினிக்கு அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடமிருந்து போன் வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதற்காக ரஜினிக்கு, ராவ் நன்றி கூறினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் உங்களை முதல்வர் பதவியில் அமர்த்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ராவ்.
இதைக் கேட்ட ரஜினிகாந்த், யோசித்துச் சொல்வதாக தெரிவித்தார். பின்னர் தான் சென்னைக்கு வரவுள்ளதாகவும், அப்போது நேரில் சந்தித்து முடிவெடுக்கலாம் எனவும் ராவ் கூறியுள்ளார்.
அதன்படி நரசிம்மராவ் சென்னைக்கு வந்தபோது, சத்தியமூர்த்தி பவனில் வைத்து ராவ் - ரஜினி சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது, தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என கூறி விட்டார் ரஜினி. மேலும், முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் மூப்பனார்தான். எனவே அவரையே முதல்வராக்குங்கள் என்றும் கூறியுள்ளார் ரஜினி.
அத்தோடு நில்லாமல், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என நான் நினைக்கிறேன் (அப்போது அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது). திமுகவுக்கு நாம் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் ராவிடம் கூறினார் ரஜினி.
ஆனால் இதை ராவ் விரும்பவில்லை. ரஜினி நேரடியாகப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும். சொந்தக் காலில் ஆட்சி அமைக்க முடியும். அதேசமயம், திமுகவுக்கு வாய்ப்பளிக்க அவர் விரும்பவில்லை. மேலும் மூப்பனாரை முதல்வராக்கவும் அவர் விரும்பவில்லை.
இது ரஜினிக்கும் புரிய வந்தது. திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
அவர் எதிர்பார்த்தபடியே அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என நரசிம்ம ராவ் அறிவித்தார். காங்கிரஸ் உடைந்தது. மூப்பனார் தலைையில் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. திமுகவுடன் கூட்டணி வைத்தது. ரஜினி ஆதரவு அளித்தார். திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதிமுக-காங்கிரஸ் கூட்டணி படு தோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதாவும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்று காயத்ரியின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications