நாளை பாமக நிர்வாகக் குழுக் கூட்டம்: முக்கிய முடிவுக்கு வாய்ப்பு?

அதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ராஜ்யசபா தேர்தலில் தங்களுக்கும் ஒரு சீட் வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரி வருகிறார். ஆனால் இதை திமுக நிராகரித்து விட்டது. ஏற்கனவே பாமகவுக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டத்தில் சிபிஐக்கும், பின்னர் தற்போது சிபிஎம்முக்கும் சீட் தரப்படவுள்ளது. இதுவரை சீட் தரப்படாத காரணத்தால் காங்கிரஸுக்குக் கூடுதலாக ஒரு சீட் தரப்படுவதாக முதல்வர் கருணாநிதி விளக்கமாக தெரிவித்திருந்தார்.
ஆனால் ராமதாஸ் தனது நிலையிலிருந்து பின் வாங்கவில்லை. கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, மார்ச் 15ம் தேதி வரை (அன்றுதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்) அவகாசம் தருவதாக கெடு விதித்தார்.
இந் நிலையில் அதிரடியாக திமுக தனது இரு வேட்பாளர்களை அறிவித்தது. தொடர்ந்து சிபிஎம்மும் அறிவித்தது. காங்கிரஸ் ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்கக் கூடும் என்று தெரிகிறது.
இதையடுத்து பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் மீண்டும் நாளை அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் கட்சியின் நிலை என்ன, யாரை ஆதரிப்பது, நடு நிலை வகிக்கலாமா, திமுக கூட்டணியிலிருந்து விலகலாமா என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
நாளைய கூட்டத்தில் பாமக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications