டிரான்ஸ்பரன்ட் சிலிண்டர்களை விற்பனைக்கு விட அரசு முடிவு
டெல்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவை டிரான்ஸ்பரன்ட் சிலிண்டர்களில் அடைத்து விற்பனைக்கு விட மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் தின்ஷா படேல் எழுத்து மூலம் அளித்த பதிலில், முதலில் தேர்ந்தெடுத்த சில நகரங்களில் இந்த டிரான்ஸ்பரன்ட் சிலிண்டர்களை, குறிப்பிட்ட அளவுக்கு புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.
டெல்லி மற்றும் மும்பையில், காஸ் விநியோகத்தை இந்திரபிரஸ்தா காஸ் நிறுவனம் மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவையும் சேர்த்து டெல்லியில் தற்போது 153 சி.என்.ஜி. (இயற்கை எரிவாயு) நிலையங்கள் உள்ளன. மும்பை மற்றும் அதன் புறநகர்களில் 127 நிலையங்கள் உள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications