ராஜ்யசபா-அதிமுக வேட்பாளர் பாலகங்கா!

தமிழகத்திலிருந்து நடைபெறவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறுகிறது.
அதிமுக-மதிமுக போட்டி:
இந் நிலையில் அதிமுக தனது வேட்பாளர் பெயரை இன்று அறிவித்தது. முன்னாள் குடிசை மாற்று வாரியத் தலைவர் ந.பாலகங்கா அதிமுக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணி இரு இடங்களில் போட்டியிடுகிறது. ஒரு இடத்தில் அதிமுகவும், இன்னொரு இடத்தில் மதிமுகவும் போட்டியிடவுள்ளன.
அதிமுக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கட்சியின் தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் நா.பாலகங்கா போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியால் ஒரு வேட்பாளரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். கூடுதலாக 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்தால் இன்னொரு வேட்பாளரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும்.
அதேசமயம் புதிய திருப்பமாக மதிமுகவும் வேட்பாளரை நிறுத்தும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியால் ஒரு வேட்பாளரை மட்டுமே போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். கூடுதலாக 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்தால் இன்னொரு வேட்பாளரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும். அந்த இடத்தில் மதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த ஜெயலலிதாவும் வைகோவும் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications