பள்ளிகளுக்கு அருகில் மதுக் கடைகள்-பாஜக போராட்டம்
சென்னை: கோயில் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி போராட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சித் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் அதிகளவில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இது மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் பெரிதும் இடையூறாக உள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கை அமல்படுத்துவதில் கடந்த 25 ஆண்டுகளாக தடுமாற்றம் நிலவி வருகிறது. பார் வசதிகளுடன் டாஸ்மாக் கடைகளை நடத்தி அரசு இதில் வருமானம் பார்க்கிறது.
கோயில் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற திமுக அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications