ராஜ்யசபா-22 ஆண்டுக்குப் பின் முதல் முறையாக வாக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 1986ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக வருகிற ராஜ்யசபா தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழக ராஜ்யசபா தேர்தல் களம் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 6 இடங்களுக்கு 7 பேர் களத்தில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

திமுக கூட்டணிக்கு 4 இடங்களில் போட்டியின்றி வெல்ல முடியும். அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் போட்டியின்றி வெல்ல முடியும்.

ஆனால் திடீர் திருப்பமாக திமுக கூட்டணி 5 இடத்திலும் அதிமுக அணி 2 இடங்களில் போட்டியிடுகின்றன.

இதனால் 6 பதவிகளுக்கு 7 பேர் களத்தில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

1986ம் ஆண்டு தமிழக ராஜ்யசபா தேர்தலில் தான் கடைசியாக வாக்குப் பதிவு நடந்தது. அதன் பின்னர் எந்தத் தேர்தலிலும் வாக்குப் பதிவு நடக்கவில்லை.

1986ம் ஆண்டும் 6 இடத்திற்குத்தான் தேர்தல் நடந்தது. அப்போது 7 பேர் களத்தில் இருந்தனர். ஜனதா கட்சி சார்பில் இரா. செழியன் நிறுத்தப்பட்டார். அவரை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தோற்கடித்தார்.

அதன் பின்னர் தற்போது முதல் முறையாக வாக்குப் பதிவு நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+