நஷ்டஈடு தர காசில்லை-மன்சூர் கைவிரிப்பு
நடிகர் மன்சூர் அலிகானால் கற்பழிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் மன்சூர். அங்கும் நஷ்ட ஈடு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் சிறைத் தண்டனை ரத்து செய்யபப்ட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனார் மன்சூர். அங்கு உயர்நீதிம்ன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், உறுதி கூறியபடி இழப்பீட்டை மன்சூர் தர வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து பணத்தை வசூலிப்பதற்காக வடபழனி உதவி ஆணையர் விஜயராகவன், இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் வடபழனி பெரியார் சாலையில் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்றனர்.
மன்சூர் அலிகானிடம் கோர்ட்டு உத்தரவைக் காட்டி ரூ.7 லட்சத்தை தருமாறு போலீசார் கேட்டனர். ஆனால், தன்னிடம் ரூ.7 லட்சம் இல்லை என்றும், தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.3,000 மட்டுமே இருப்பதாகவும் போலீசாரிடம் மன்சூர் அலிகான் கூறினார்.
சொந்தப் படம் எடுத்து நஷ்டமாகி விட்டது. பெரும் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னால் இந்தப் பணத்தை செலுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
மன்சூர் அலிகான் தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என்று கூறியுள்ளார். அவர் பயன்படுத்தும் ஒரே ஒரு டாடா சபாரி காரும் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது.
இதையடுத்து மன்சூர் அலிகானிடமிருந்து பணத்தை வசூலிக்க முடியவில்லை என்று சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications