முட்டத்தில் துறைமுகம் கட்டும் ஜேப்பியார்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் கடலோர கிராமமான முட்டத்தில், சிறிய அளவிலான துறைமுகத்தை உருவாக்கி வருகிறார் சென்னை சத்யபாமா பல்கலைக்கழக வேந்தரான ஜேப்பியார்.
தமிழகத்தின் முதல் தனியார் துறைமுகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜேப்பியார் மீன்பிடி துறைமுகம் முட்டம் பிரைவேட் லிமிட்டெட், சென்னை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய நிறுவனம், இந்த துறைமுகத்ைத உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து ஜேப்பியார் கூறுகையில், கடந்த காலத்தில் முட்டம் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக இருந்தது. அந்த பெருமையை மீண்டும் கொண்டு வரும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதன் ஒரு கட்டம்தான் இந்த துறைமுகம்.
இந்தத் துறைமுகம் முற்றிலும் சூரிய சக்தியில் இயங்கும். வழக்கமான மின்சாரத்தை கொண்டு இது இயங்காது.
இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 40 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. திறந்த நிலை டெண்டர் மூலம் இந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
இந்த துறைமுகத்தில், சிறிய படகு கட்டும் தளம் மற்றும் ஊழியர்களுக்கான பள்ளி, கல்லூரிகள் ஆகியவையும் இடம் பெறும். இங்கு 600 மீன் பிடி படகுகளை நிறுத்த முடியும்.
சிறு ஹோட்டல்கள், மீன்களைப் பதப்படுத்தும் குளிர்சாதன வசதி, ஏல அறைகள், வலைகளை பழுதுபார்க்கும் ஷெட்டுகள், தொழிலாளர்கள் தங்கும் அறைகள் ஆகியவையும் இடம் பெறும்.
ரூ. 55 கோடி செலவில், 15 மாதங்களில் இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்படும் என்றார் ஜேப்பியார்.
முன்னாள் அதிமுக பிரமுகரான ஜேப்பியார் தற்போது கல்விப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதுதவிர சிமென்ட், ஸ்டீல் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications