முட்டத்தில் துறைமுகம் கட்டும் ஜேப்பியார்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் கடலோர கிராமமான முட்டத்தில், சிறிய அளவிலான துறைமுகத்தை உருவாக்கி வருகிறார் சென்னை சத்யபாமா பல்கலைக்கழக வேந்தரான ஜேப்பியார்.
தமிழகத்தின் முதல் தனியார் துறைமுகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜேப்பியார் மீன்பிடி துறைமுகம் முட்டம் பிரைவேட் லிமிட்டெட், சென்னை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய நிறுவனம், இந்த துறைமுகத்ைத உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து ஜேப்பியார் கூறுகையில், கடந்த காலத்தில் முட்டம் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக இருந்தது. அந்த பெருமையை மீண்டும் கொண்டு வரும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதன் ஒரு கட்டம்தான் இந்த துறைமுகம்.
இந்தத் துறைமுகம் முற்றிலும் சூரிய சக்தியில் இயங்கும். வழக்கமான மின்சாரத்தை கொண்டு இது இயங்காது.
இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 40 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. திறந்த நிலை டெண்டர் மூலம் இந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
இந்த துறைமுகத்தில், சிறிய படகு கட்டும் தளம் மற்றும் ஊழியர்களுக்கான பள்ளி, கல்லூரிகள் ஆகியவையும் இடம் பெறும். இங்கு 600 மீன் பிடி படகுகளை நிறுத்த முடியும்.
சிறு ஹோட்டல்கள், மீன்களைப் பதப்படுத்தும் குளிர்சாதன வசதி, ஏல அறைகள், வலைகளை பழுதுபார்க்கும் ஷெட்டுகள், தொழிலாளர்கள் தங்கும் அறைகள் ஆகியவையும் இடம் பெறும்.
ரூ. 55 கோடி செலவில், 15 மாதங்களில் இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்படும் என்றார் ஜேப்பியார்.
முன்னாள் அதிமுக பிரமுகரான ஜேப்பியார் தற்போது கல்விப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதுதவிர சிமென்ட், ஸ்டீல் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications