கேரளத்தின் புதிய அணை-தடுக்க காங் எம்பி கோரிக்கை
தேனி: முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியகுளம் தொகுதி காங்கிரஸ் எம்பி ஆருண் கோரியுள்ளார்.
தேனியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை, ராமநாதபரம் உள்ளிட்ட 5 தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதரமாக முல்லை பெரியாறு உள்ளது.
இந்த அணை பலவீனமாக உள்ளதாக கூறி அதன் அருகில் ஒரு புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறுக்கு வரும் தண்ணீர் வரத்து தடுக்கப்படும். தென் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
எனவே கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சி செய்து வருகிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தேனி-போடி அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ரயில்வே பட்ஜெட்டில் ரூ.184 கோடி ஒதுக்கிய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டுக்கல்-கூடலூர், சின்னமனூர் வழியாக சபரி மலைக்கு பக்தர்கள் செல்ல பாதை அமைத்து தர வேண்டும். தேனியில் புதிய பஸ் நிலையம் அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications