பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து - பெட்டி எரிந்து சாம்பல்

சென்னையிலிருந்து மதுரைக்கு நேற்று இரவு வழக்கம் போல பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. இன்று காலை 5.30 மணியளவில் ரயில் திண்டுக்கல் அருகே வட மதுரை - செங்குளத்துப்பட்டிக்கு இடையில் சென்று கொண்டிருந்தபோது, என்ஜினுக்கு அடுத்து உள்ள முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
இதைப் பார்த்த பயணிகள் அவசரம் அவசரமாக அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் பெட்டியிலிருந்து வேகமாக இறங்கினர். இந்த நிலையில் பெட்டியில் ஏற்பட்ட தீ வேகமாக பரவத் தொடங்கியது.
ரயிலை நிறுத்திய பின்னர் அந்தப் பெட்டியை மட்டும் தனியாகப் பிரித்து விட்டனர். சுமார் 2 மணி நேரத்தில் அந்தப் பெட்டி முழுவதும் எரிந்து சாம்பலானது. அனைத்துப் பயணிகளும் கீழே குதித்து தப்பியதால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.
அந்த அன் ரிசர்வட் பெட்டியோடு, சரக்குப் பெட்டியும் இணைந்திருந்தது. அந்தப் பெட்டியிலிருந்துதான் தீ பரவியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் அதிகாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் - திருச்சி பாசஞ்சர் ரயில் இந்த விபத்தைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications