ஜி.கே.வாசன் மீண்டும் போட்டி
டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் இரு காங்கிரஸ் வேட்பாளர்களில் ஜி.கே.வாசன் பெயரை மட்டும் காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. நாளை இரவுக்குள் 2வது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 5 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் திமுக, காங்கிரஸ் தலா 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.
திமுக வேட்பாளர்கள் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மீண்டும் போட்டியிடுகிறார். இத்தகவலை டெல்லியில் கட்சிப் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று அறிவித்தார்.
2வது வேட்பாளர் என்னவாயிற்று என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அது இன்னும் முடிவாகவில்லை. நாளை இரவுக்குள் முடிவாகி விடும் என்றார் ஆஸ்கர்.
2வது இடத்தைப் பிடிக்க காங்கிரஸில் உள்ள பல்வேறு கோஷ்டிகளும் கடுமையாக மோதிக் கொண்டிருப்பதால் 2வது வேட்பாளர் பெயரை இப்போது வெளியிட வேண்டாம், கடைசி நேரத்தில் வெளியிடலாம் என கட்சி மேலிடம் முடிவெடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications