Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. மனு வாபஸ்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
டெல்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திரும்பப் பெற்றார்.

கடந்த 1998-99ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை. இருப்பினும் இதுதொடர்பாக வருமான வரித்துறை சமரசத் தீர்வு மையத்தில் பின்னர் அவர் தாக்கல் செய்தார். இதை சமரசத் தீர்வு மையம் ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து வருமானவரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சமரசத் தீர்வு மையத்தின் உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானம் குறித்த விவரங்களை வருமான வரித்துறையிடம்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் அதன் பின்னரே சமரசத் தீர்வு மையத்தை நாட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தங்களது மனுவை திரும்பப் பெறுவதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+