லஞ்சம்-பி.எப். அதிகாரியை ரிமாண்டில் வைக்க உத்தரவு
திருச்சி: தனியார் கல்வி நிறுவனம் பி.எப் கணக்கு தொடங்க லஞ்சம் வாங்கிய அதிகாரியை ரிமாண்டில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
கும்பகோணத்தில் உள்ள கல்வி நிறுவனம், தனது கல்லூரிகளின் பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்குவதற்காக திருச்சியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை தொடர்பு கொண்டது.
அதற்கு பிஎப் அலுவலக உதவி கமிஷனர் பாண்டியன், ரூ.4 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதுகுறித்து, கல்லூரி நிர்வாகம் தரப்பில் சிபிஐயில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பிஎப் அலுவலகத்தில் ரகசியமாக கண்காணித்தனர்.
கல்லூரி நிர்வாகத்தினரிடம் இருந்து பாண்டியன் பணத்தை வாங்கும்போது சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அவரை நேற்று சிபிஐ அதிகாரிகள் மதுரையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
பாண்டியனை ரிமாண்டில் வைக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். பாண்டியன் தாக்கல் செய்த ஜாமீன் மனு குறித்து இறுதி முடிவை நீதிபதி அறிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications