பாமக முடிவு இன்று தெரியும்

ராஜ்யசபா தேர்தலில் திமுக அணியில் இடம் பெற்றுள்ள பாமக ஒரு சீட் கேட்டது. ஆனால் திமுக கொடுக்க மறுத்து விட்டது. மேலும் அதிரடியாக தான் போட்டியிடும் 2 இடங்களுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து, அவர்களும் நேற்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து விட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது வேட்பாளரை அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சி நாளை அறிவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை நடந்த பாமக நிழல் பட்ஜெட் வெளியீட்டின்போது ராஜ்யசபா தேர்தலில் பாமகவின் நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இரவு அறிவிக்கப்படும் என்றார்.
ஆனால் நேற்று மாலை எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை. அதேசமயம், பாமக தலைவர்களுடன் ராமதாஸ் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தி.நகர் பென்ஸ் பார்க் ஹோட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தல் குறித்த இறுதியான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெறுவதாக பாமக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications