புலிகள் பகுதிகளிலும் ஜனநாயகத்தை பரப்புவோம்-ராஜபக்சே
கொழும்பு: விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் ஜனநாயகத்தைக் கொண்டு செல்வோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜபக்சே, வன்னிப் பகுதியில் தீவிரவாதத்தைப் பரப்பி வருவோர், மக்களை அடக்கியாள அனுமதிக்க மாட்டோம்.
கிழக்கில் உள்ள மக்கள் இனியும் வன்னி தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி அவதிப்பட வேண்டியதில்லை.
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டது. இதன் காரணமாகவே அங்கு நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முடிந்தது.
அங்கு நிலவி வந்த துப்பாக்கி கலாச்சாரம் முடிவு கட்டப்பட்டு விட்டது. ஜனநாயக உரிமைகளும், சுதந்திரமும் அங்குள்ள மக்களுக்குக் கிடைத்துள்ளது என்றார் அவர்.
கிழக்கில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும், ஆளுங்கட்சியான சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் கருணா கட்சிக்கு பெரும்பாலான இடங்கள் கிடைத்தன.
ஆனால் இந்தத் தேர்தலை முக்கிய தமிழர் கட்சியான தமிழ் தேசிய கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் வசம் இருந்த கிழக்குப் பகுதியை 8 மாதங்களுக்கு முன்பு இலங்கை ராணுவம் கைப்பற்றியது நினைவிருக்கலாம்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications