ஏழாம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை !
விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவரது மகள் சுசீலா (13), அருகில் உள்ள இருஞ்சிறை கிராம அரசுப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இருஞ்சிறையைச் சேர்நத ரவிச்சந்திரன் என்ற வாலிபர் சுசிலாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுபற்றி சுசீலாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில் கர்ப்பமான சுசீலாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் சுசீலாவின் பெற்றோர்கள் அனைத்து இந்திய மாதர் சங்க உதவியை நாடினர். அவர்கள் முயற்சியால் சுசீலாவை ரவிசந்திரனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறி மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications