அருணா கொலை வழக்கு-சாட்சிகள் விசாரணை முடிந்தது
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்தது. 19ம் தேதி வக்கீல்கள் வாதம் நடைபெறுகிறது. இதையடுத்து விரைவில் தீர்ப்பு கூறப்பட உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா மற்றும் அவரது நண்பர் ஆசிரியர் பொன்ராஜ் ஆகியோர் கடந்த 31-12-2004 அன்று ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டியில் வாக்கிங் சென்றபோது பைக்கில் வந்த சிலர் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
இந்த வழக்கு முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்துள்ளது. இதையடுத்து வரும் 19ம் தேதி வக்கீல்கள் வாதம் நடக்கிறது. அதன் பின்னர் இம்மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலடி அருணா கொலை வழக்கில் விசாரணை முதலில் நெல்லை மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி கணேசன் முன்னிலையில் நடந்தது. முதல் 2 சாட்சிகளான பால்ராஜ், ஆத்தியப்பன் ஆகியோர் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பல்டியடித்து விட்டனர்.
4 சாட்சிகள் விசாரிக்கபட்ட நிலையில் இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று ஆலடி அருணா தரப்பு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எஸ்.ஏ.ராஜா தரப்பு வழக்கறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கை விசாரிக்க ஐகோர்ட் தடை விதித்தது.
இதனால் இந்த வழக்கில் 6 மாதம் விசாரனை நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையே வழக்கில் திடீர் திருப்பமாக இதை விசாரித்து வந்த நீதிபதி கணேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி இவ்வழக்கு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு மீண்டும் விசாரணை துவங்கியது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications