தனியார் வங்கி ஏஜென்ட் கட்டையால் அடித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தனியார் வங்கி ஏஜென்ட் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை கூடுவாஞ்சேரி ரயில் நிலைய தண்டவாளத்தில் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், காலிஷ் தாஸ் என்பவர் தனது சகோதரரை காணவில்லை என்று தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கூடுவாஞ்சேரியில் கண்டுபிடிக்கப்பட்டவர் காலிஷ்தாஸாக இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து அந்த உடலை காலிஷ்தாஸிடம் காட்டியபோது அது தனது தம்பி ஜேசுதாஸ் (36) என்று அடையாளம் காட்டினார் காலிஷ்தாஸ்.
ஜேசுதாஸ், அண்ணா சாலையில் உள்ள ஏபிஎன் அம்ரோ வங்கியில் ஏஜென்ட்டாக பணியாற்றி வந்தார். அவர் எதற்காக, யாரால் கொல்லப்பட்டார் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications