பள்ளி, கல்லூரிகளில் பீட்ஸா, பர்கருக்கு தடை!: பட்டாணி, கடலை, சுண்டல் விற்கலாம்!!

இது தொடர்பாக நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராசாராமன் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், பள்ளி, கல்லூரிகளில் இனிமேல் உடல் நலத்தை கெடுக்கும் பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சத்து மாவு உருண்டை, சோயா பால், தயிர், ரவை பொருட்கள், அவல், அவித்த பட்டாணி, வேர்க்கடலை, பழச்சாறு, பழ வகைகள், மோர், கேழ்வரகு, சுண்டல், கடலை மிட்டாய், எள் உருண்டை, காய்கறி சூப், பொருட்கள் போன்றவற்றை விற்கலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும்போது ஒரு தடவை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகள், கல்லூரிகள் அருகிலும் சாக்லேட், ஐஸ்கிரீம் விற்க தடை விதிக்கப்படுகிறது. மீறி விற்கப்பட்டால் அது பற்றி பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் அந்த கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications