கோவைக்கு புதிய போலீஸ் கமிஷ்னர்
சென்னை: முன்னாள் சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னராக இருந்த ஆர்.நடராஜ் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த சுனில்குமார் கோவை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை நகர போலீஸ் கமிஷனராக இருந்த சி.கே.காந்திராஜன் அங்கிருந்து மாற்றப்பட்டு, சென்னையில் உள்ள மாநில மனித உரிமை கமிஷன் ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமை கமிஷன் கூடுதல் டி.ஜி.பியாக பதவி வகித்து வந்த முன்னாள் சென்னை போலீஸ் கமிஷ்னர் ஆர்.நடராஜ், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில், தேர்தல் பிரச்சார நேரத்தில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவை வாழ்த்திப் பேசியதோடு அவருக்கு ஓட்டு சேகரிப்பது போல பேசியதால் சிக்கலில் மாட்டியவர் நட்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications