உலகின் அதிவேக டீசல் என்ஜின் சூப்பர் படகு அறிமுகம்
துபாய்: உலகின் அதிவேக, டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சூப்பர் பவர் படகை இங்கிலாந்தைச் சேர்ந்த எக்ஸ்.எஸ்.எம்.ஜி. நிறுவனம் தயாரித்துள்ளது.
கடல் சாகச விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்களுக்கு குறிப்பாக அதி வேகமாக படகுகளில் பயணம் செய்ய விரும்புவோருக்கு இந்த செய்தி உண்மையிலேயே திரில்லிங்கான சந்தோஷச் செய்தியாகும்.
இங்கிலாந்தைச் சேர்ந்த எக்ஸ்.எஸ்.எம்.ஜி. மரைன் என்கிற நிறுவனம், அதிக வேகமும், அதேசமயம், எந்தவித அதிர்ச்சியோ, நடுக்கமோ இல்லாத வகையிலான, அதி வேக டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சூப்பர் பவர் படகை தயாரித்துள்ளது.
இதன் அறிமுக விழா துபாயில் நேற்று நடந்தது.
2.5 மில்லியன் டாலர் விலை கொண்ட இந்த சூப்பர் பவர் படகு, மணிக்கு 70 முதல் 100 நாட்ஸ் வேகத்தில் செல்லும். இந்த படகை, தண்ணீரின் கார் என அதன் வடிவமைப்பாளர்கள் வர்ணித்துள்ளனர்.
உலகின் பிரபல என்ஜினியர்கள், டிசைனர்கள், படகு வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து இந்தப் படகை உருவாக்கியுள்ளனர்.
அதி வேகம் அதேசமயம், போதிய பாதுகாப்புடன் கூடிய இந்த படகை, படகுப் பிரியர்கள் விரும்புவார்கள் எக்ஸ்.எஸ்.எம்.ஜி. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லான் சான்டர்சன்.