ஜெ. வழக்குகள்: இனி வக்கீல் நவநீதகிருஷ்ணன் கையில்?

அதிமுக ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த மூத்த வழக்கறிஞர் ஜோதி, ஜெயலலிதா-சசிகலா மீதான வழக்குகளில் ஆஜராகி வந்தார்.
இந் நிலையில் தினகரன்-சசிகலா புண்ணியத்தால் ஜோதிக்கு ஆப்பு வைக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வாய்ப்பு தரப்படவில்லை.
இதையடுத்து கட்சியைவிட்டு விலகிய கையோடு ஜெ-சசி மீதான ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளையும் அப்படியே விட்டுவிட்டு வந்தார் ஜோதி.
சசிகலாவின் பிடியில் கட்சியும் ஜெயலலிதாவும் இருப்பதால்தான் கட்சியை விட்டு விலகுவதாகக் காரணம் கூறிய ஜோதி, இனி ஜெயலலிதா சார்பாக வழக்குகளில் ஆஜராகப் போவதில்லை என்று கூறி வழக்கு கட்டுகளையும் போயஸ் கார்டனுக்கு அனுப்பினார்.
இந் நிலையில் அவரது இடத்தில் வக்கீல் நவநீதகிருஷ்ணனை நியமிக்க அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
நவநீதகிருஷ்ணன் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
ஐகோர்ட் நீதிபதிக்கு இணையான அந்தஸ்தைப் பெற்றுள்ள இந்த பதவியில் உறுப்பினர்கள் 6 ஆண்டு காலம் அல்லது 62 வயது வரை நீடிக்க முடியும்.
ஆனால் நவநீதகிருஷ்ணனின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இதனால் அவர், ஜோதியின் இடத்தை நிரப்பலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications