புதுச்சேரியில் அமெரிக்க மாணவி மர்ம சாவு
புதுச்சேரி: புதுச்சேரியில் அமெரிக்க மாணவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.
அமெரிக்காவை சேர்ந்த மாணவி எலிசபெத் ( 22). புதுச்சேரியை அடுத்த ஆரோவில் பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் தங்கி ஆரோவில் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து இருந்து எலிசபெத் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த சக மாணவிகள் அறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது எலிசபெத் தனது அறையில் தூக்கில் தொங்கி பிணமாகக் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். எலிசபெத் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் மரணம் பற்றி சர்ச்சைகளை கிளப்பி வரும் நேரத்தில் அமெரிக்க மாணவியின் சாவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications