'போலி' டீத்தூளால் வாந்தி, பேதி- 10 பேர் பாதிப்பு
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே போலி டீத்தூளில் தயாரிக்கப்பட்ட டீ சாப்பிட்ட பத்து பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான டீக் கடைகளில் போலி டீத்தூள்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. கடைக்காரர்கள் தெரிந்தோ, தெரியாமலோ இவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.
போலி டீத்தூளை தயாரிக்கும் ஆலைகள் பெரிய அளவில் தொழிலை நடத்திக் கொண்டிருக்கின்றன. புளியங்கொட்டையிலிருந்துதான் இந்த போலி டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. மேலும் ஒரிஜினல் டீத்தூளின் நிறத்தைக் கொண்டு வருவதற்காக வேதிப் பொருட்களையும் அதில் கலந்து விஷத் தூளாக மாற்றி விடுகிறார்கள் போலி டீத்தூள் தயாரிப்பாளர்கள்.
இந்த போலி டீத்தூளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை சாப்பிடுவோருக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி, மயக்கம், வயிறு உபாதை போன்றவற்றுக்கு ஆளாகின்றனர்.
மன்னார்குடி அருகே அகோரம் கிராமத்தல் ஒரு டீ-க்கடையில் டீ குடித்த 10 பேருக்கு வாந்தி, பேதி, ஏற்பட்டுள்ளது. அவர்கள் சாப்பிட்ட டீ தூள் போலி டீத்தூள் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களை மன்னார்குடியில் உள்ளஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அதிகாரிகள் உரிய முறையில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி இப்படிப்பட்ட போலி டீத்தூள் தயாரிப்பாளர்களையும் விற்பனையாளர்களையும் ஒடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications