கேரளாவுக்கு கடத்தல்-ரூ.20 லட்சம் எரிசாராயம் பறிமுதல்
தென்மலை: கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பிடிப்பட்டது.
செங்கோட்டை, தென்மலை புறக்காவல் நிலைய போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் தலா 35 லிட்டர் கொண்ட 45 கேன்களில் சுமார் 5,000 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து லாரி டிரைவர் சுதீஷ், கிளீனர் ஷிபு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். செங்கோட்டை அருகேயுள்ள புளியரையில் இருந்து பத்தனம்திட்டைக்கு லாரியை ஓட்டிச் செல்லும்படி கூறியதாகவும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர்கள் கூறினர்.
அச்சன்புதூர், செங்கோட்டை காவல்நிலைய சோதனை சாவடிகளை எப்படி கடந்து வந்தனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.