லஞ்சம் வாங்கிய கல்வித்துறை பெண் அதிகாரி கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே ஏ.நடுப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பழனியாண்டி இறந்தார். கணவரின் சேம நல நிதி உள்பட அரசு சலுகைகளை பெற அவரது மனைவி பழனியம்மாள், ஆத்தூர் வட்டார உதவி துவக்க கல்வி அலுவலர் பாக்கியலட்சுமியை அணுகினார்.
அதுதொடர்பான ஆவணங்கில் கையெழுத்து போட ரூ.2,000 லஞ்சம் தர வேண்டும் என்று பாக்கியலட்சும் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பழனிம்மாள் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராஜாமுகமது தலைமையில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். பழனியம்மாள் ரூ.2000த்தை லஞ்சமாக பாக்கியலட்சுமி வாங்கும், அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications