இயந்திரக் கோளாறு:140 பயணிகளுடன் டெல்லி விமானம் தப்பியது
சென்னை: ரன்வேயில் கிளம்பும்போது இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 140 பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட விமானத்தில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இருந்து இன்று காலையில் தனியார் நிறுவன விமானம் ஒன்று டெல்லிக்குப் புறப்படத் தயாரானது. அதில் 140 பயணிகள் அமர்ந்து இருந்தனர்.
ரன்வேயில் கிளம்பி பறக்கத் தொடங்கும் சமயத்தில் விமான எஞ்சினில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து உடனடியாக விமானத்தை நிறுத்தினர். பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
சுமார் 2 மணிநேரம் முயன்றும் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முடியவில்லை.
இந் நிலையில் காத்திருந்து வெறுப்படைந்த பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகளிடம் சண்டையிடத் தொடங்கினர்.
இதனால் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான மாற்றுவிமானம் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அதில் அனுப்பிவைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications